Friday, April 17, 2009

இரு...

இருட்டு நகரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தில் அந்த லைப்ரரி இருக்கிறது. அந்த லைப்ரரியில் இரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. அதில், இரண்டாவது புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே உண்டு. அந்தப் பக்கம் இரண்டு Coloumnகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு Columnல் ஆப்பிரிக்க யானையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இன்னொரு Columnல் Fluffy வகை பூனைகளின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து என்னத் தெரிகிறது?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
யானைக்கு ஒரு COLUMN வந்தால், பூனைக்கு ஒரு COLUMN வரும்.

நோ, நோ, நோ. அழக்கூடாது!!!

8 comments:

Thamiz Priyan said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Bleachingpowder said...

இதெல்லாம் ரெம்ப ஓவர்..நான் பாட்டுக்கு சிவனேனு ஆணி புடிங்கிட்டு இருந்தேன், தலைப்ப பார்த்துட்டு எதோ புது மேட்டர்னு வந்தா....இதுல அழக்கூடாதுனு அட்வைஸ் வேற....அவ்வ்வ்வ்வ்வ்

dondu(#11168674346665545885) said...

யானைக்கு ஒரு காலம்னா, பூனைக்கு ஒரு காலம் வராமலா போகப்போகிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அடேடே நீங்களே விடையும் கொடுத்தீங்களா? நான் ஸ்க்ரோல் பண்ணாம வுட்டுட்டேன். ஒரு பின்னூட்டம் கேன்சல்!!!!!!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெட்டிப்பயல் said...

Y is this Kolai veri

Anonymous said...

இந்த கொலை வெறி கடிக்கு 'எசக்கடி' கடிக்கலைன்னா சங்கம் எப்படி வளரும்?

தேள் solid-ஆ liquid-ஆ?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

Liquid தான்.
கொட்டுமே!

சென்ஷி said...

// madrasthamizhan said...

இந்த கொலை வெறி கடிக்கு 'எசக்கடி' கடிக்கலைன்னா சங்கம் எப்படி வளரும்?

தேள் solid-ஆ liquid-ஆ?
//

ஏன் சாலிட் ஐட்டம் ஏதும் கொட்டி நீங்க பார்த்ததில்லையா :)

யோசிப்பவர் said...

சென்ஷி,
//ஏன் சாலிட் ஐட்டம் ஏதும் கொட்டி நீங்க பார்த்ததில்லையா :)//
ஒருத்தர் கடிச்சா அனுபவிக்கனும், அழனும். ஆனால் ஆராயக்கூடாது....!!!;-))