Tuesday, May 04, 2010

புகை

ஒரு ஏர்போர்ட்டில் நின்று கொண்டு ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த ஒரு மனிதன், புகை பிடித்துக் கொண்டிருந்த அந்த மனிதரிடம் சென்று, “ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை முறை புகை பிடிப்பீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், ”எதற்காக கேட்கிறீர்கள்?” என்றார்.

“இதுநாள் வரை, புகை பிடிப்பதற்காக நீங்கள் செலவழித்த பணத்தை சேமித்து வைத்திருந்தீர்களானால், எதிரே நிற்கும் இந்த விமானத்தையே இன்று நீங்கள் சொந்தமாக விலைக்கு வாங்கியிருக்கலாம். அதற்காகத்தான் கேட்டேன்.” என்றார்.

உடனே அந்த மனிதர், “அப்படியானால் அந்த விமானம் உங்களுக்கு சொந்தமானதா?”

“இல்லை.”

“உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி! ஆனால், அந்த விமானம் இப்பொழுது கூட எனக்கு சொந்தமானதுதான்.” என்றார் அந்த புகை பிடிப்பவர்.

Moral of the Story : Unneccessary Advice is injurious to health.

2 comments:

மசக்கவுண்டன் said...

அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதே.

அகல்விளக்கு said...

யப்பே.....

பேருக்கேத்த மாதிரியே இருக்கீங்க...

:-)